டில்லி

ரும் 16 ஆம் தேதி முதல் டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாகப் பல திட்டங்களைத் தீட்டி வருகிறது.  இதில் ஒன்றாக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துடன் இணைந்து வடகிழக்கு பகுதிகளுக்கான சுற்றுலா ரயிலை இயக்க முடிவாகி இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

”டில்லியில் சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயில் இயக்கப்படும். இந்த ரயில் அசாம், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளைக்  கடந்து செல்லும். 

ரயிலில், 3 வகையான ஏ.சி. பெட்டிகள் உள்ளன. ரயில் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ரயிலில், சி.சி.டி.வி. கேமிராக்கள் பாதுகாப்பு வசதிகளுக்காக இணைக்கப்பட்டு உள்ளன.  மேலும் ஒவ்வொரு பெட்டியிலும் பாதுகாப்புக்கென்று காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் பயணம் செய்து விட்டு, மீண்டும் டில்லிக்குத் திரும்பும். மொத்தம் 5,800 கி.மீ. தொலைவை ரயில் கடந்து செல்லும். 

மொத்தம் 15 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில், ஏ.சி. ஓட்டல்களில் இரவில் தங்கும் வசதி, அனைத்து வகையான சைவ உணவுகள், அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட பேருந்து வசதி, பயண காப்பீடு, சுற்றுலா பாதுகாப்பு சேவை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.