டெல்லி
வரும் 2025-26 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்

“நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி” (National Testing Agency) எனும் அமைப்பால் நீட் (NEET) என அழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மருத்துவத்துறையில் பட்டப்படிப்பில் சேர்வதற்கு மிகமுக்கியமான தேர்வாக கருதப்படுகிறது. ஆண்டு தோறும் தேசிய அளவில் நடத்தப்படும் நீட் என்னும் நுழைவுதேர்வு நடத்தப்படுகிறது.
மே மாதம் நடத்தப்படும் இந்த தேர்வு ஆங்கிலம் (English), இந்தி (Hindi), அசாமி (Assamese), பெங்காலி (Bengali), குஜராத்தி (Gujarati), கன்னடம் (Kannada), மலையாளம் (Malayalam),மராத்தி (Marathi), ஒடியா (Odia),பஞ்சாபி ( Punjabi), தமிழ் (Tamil), தெலுங்கு (Telugu) மற்றும் உருது (Urdu) ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) முன்னர் தெரிவித்தபடி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது NEET (UG)-2025, பேனா மற்றும் காகித முறையில் (OMR அடிப்படையில்) ஒரே நாளில், ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்திருந்தது.
இ 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுவதால் இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படப்படுகிறது.