மும்பை

நாளை மும்பையில் சுரங்க மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார

கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மும்பை மெட்ரோ நிர்வாகம் சார்பில மூன்று கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் (ஆரே முதல் பிகேசி) பணிகள் நிறைவடைந்துள்ளது.

தசராவை முன்னிட்டு ரூ.14.120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் – ஆரே ஜேவிஎல்ஆர் பிரிவு இடையே நகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கிவைத்து ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.

இங்கு காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், நெரிசல் நேரங்களில் சுமார் ஆறு நிமிட இடைவெளியிலும், நெரிசல் இல்லாத நேரத்தில் 15-20 நிமிட இடைவெளியிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரை சேவைகள் இயக்கப்பட உள்ளது.