சென்னை
நாளை சென்னை கடற்கரை – எழும்பூர் மார்க்கத்தில் காலை முதல் மாலை வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன

சென்னை ரயில்வே கோட்டம்,
”சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4 வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் வரும் மார்ச் 9 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி மார்ச் 9 ஆம் தேதி அன்று காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை – எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் – கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு/காஞ்சிபுரம்/திருமால்பூர்/அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும்”
என அறிவித்துள்ளது.