சிகாகோ

மிழக முதல்வர் மு க் ஸ்டாலின் நாளை சிகாகோவில் தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.  சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

முதல்வர் மு க் ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து நாளை (2-ந்தேதி) சிகாகோ நகரம் செல்கிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். முதல்வர் மு க ஸ்டாலி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் சந்திக்க உள்ளார்.