சென்னை

ன்று தமிழக சட்டசபையில் வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது/.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  எதிர்கட்சிகள்  இது சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால், பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த சட்ட திருத்த மசோதா அனுப்பப்பட்டது.

அனைத்து தரப்பினரின் கருத்துகளும் ஆலோசிக்கப்பட்டு தே.ஜ. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல் அளித்து \655 பக்க அறிக்கை தயாரானது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை ஓட்டு அடிப்படையில் அந்த அறிக்கையை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது. இந்த கூட்டுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப்பினரான பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ராம் குல்கர்னி மாநிலங்களவையில் கடந்த மாதம் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.

கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில்,முஸ்லிம் அல்லாத நபர்களை 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.  பிரச்சினைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து மாநில அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

நாளை வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழக அரசு தனித் தீர்மானம் கொண்டு வருகிறது. மேலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் இந்த தீர்மானத்தை முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, கேரளா மாநில அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் கர்நாடகா அரசும் இந்த மாதம் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.