ட்டி

ன்று ஊட்டியில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜகதீ;ப் தன்கர் பங்கேற்கிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் தமிழக அரசுக்கு போட்டியாக கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஜகதீப் தன்கர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பிறகு துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.

ஏற்கனவே தமிழக ஆளுந்ர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர்.