சென்னை

இன்று மதிமுக செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தோள்பட்டை எலும்பு முறிவுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வருகிறார்.

வைகோவை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் தொடர்ந்து 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மாலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று மருத்துவமனையில் இருந்து வைகோ வீடு திரும்பியுள்ளார். அவர் அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு நிர்வாகிகள் யாரும் வைகோவை நேரில் சந்திக்க வர வேண்டாம் என ம.தி.மு.க. தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.