சென்னை

ன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் நடைபெற்றது. மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட அரசு, காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6-ந் தேதி (அதாவது நேற்று) வரை நீடித்து, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.

பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான 2 ஆம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.