சென்னை

ன்று முதல் தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் ஆண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டபடி, கடந்த 19 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது. ஏற்கனவே காலாண்டு விடுமுறை 5 நாட்கள் விடப்பட்டு, அக்டோபர் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, காலாண்டு விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை நீட்டித்தது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை 6 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாகவும், 7 ஆம் தேதி  விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாகவும் உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. பள்ளிக் கல்வித் துறை வழக்கமாக தொடர் விடுமுறை, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று வெளியிடும் அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை.