டில்லி

ன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன.

கடந்த 4 நாட்களாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.  சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

தொடர்ந்து இரு அவைகளிலும் அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

நேற்று பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்றம் சுமுகமுடன் நடைபெறுவதற்கான விஷயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டமும் நேற்று காலை நடந்தது.

காலை 10 மணி அளவில் நடந்த இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது. மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இன்று அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இன்று 26 கட்சிகள் அடங்கிய மெகா எதிர்க்கட்சி கூட்டணி (I.N.D.I.A.) மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளது. அவர்கள் மணிப்பூர் நிலவரம் குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.