கோவை

ன்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

 

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே அதிமுக கவுன்சிலர்கள்

கோவை மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடுஇதற்கு  காரணமாக கூறப்பட்டது. திமுக கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை.

எனவே திமுக கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இன்இ கல்பனா ஆனந்தகுமார்  தனது பதவியை ராஜினாமா செய்து ஆணையரிடம் தமது உதவியாளர் மூலமாக வழங்கியுள்ள கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.