பெங்களூரு

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்

கடந்த ஆண்டு  மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையா க பதவி ஏற்று அதன் பிறகு அவர் கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த ஆட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் சித்தராமையா, காலை 10.15 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட் சுமார் ரூ.3½ லட்சம் கோடிக்குத் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய வரிகள் விதிக்கப்பட மாட்டாது என்ற் சொல்லப்படுகிறது. உத்தரவாத திட்டங்கள் பெயரில் இலவசத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு விட்டதால்,தற்போது கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் கர்நாடக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் தலைநகர் பெங்களூருவின் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   பெங்களூருவில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால் புதிய அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புகள்  உள்ளன.