டெல்லி

ன்று இந்த ஆண்டு ஹஜ் பயந்த்துக்கான முதல் விமானம் டெல்லியில் இருந்து கிளம்பி உள்ளது

இன்று அதிகாலை 2.20 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் பயணிகளி ஏற்றி கொண்டு முதல் விமானம் புறப்பட்டு சென்றது.

டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவர் கவுசர் ஜகான் செய்தியாளர்களிடம்,

இந்த விமானத்தில், 285 ஹஜ் பயணிகள் பயணித்தனர்.  பயணிகள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மொத்தம் 16,500 பேர் இந்த ஆண்டு டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்வார்கள்

என்று கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமையன்று, ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை செயலாளர் முக்தேஷ் கே. பர்தேஷி மறுஆய்வு மேற்கொண்டார்.   2024 ஹஜ் ஒதுக்கீட்டின்படி, சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.