சென்னை

ன்று அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில் சேவைகள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24-ஆம் தேதி காலை 9.10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதிகளில் காலை 11.15, 12 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரயில், சென்னை சென்டிரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.