சென்னை

ன்று பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கக்கனசிறப்பு பிரிவு கலந்தாய்வூ தொடங்குகிறது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. கடந்த 22 ஆம் தேதி இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.

இதில்  முதல்கட்டமாக, அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு, நடைபெற்றது அதே வேளையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உள 661 இடங்களில், 70 மாணவர்கள் மட்டுமே பங்கேற்று விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உள்ள 11 இடங்களில், 7 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களில், 6 பேருக்கு என்ஜினீயரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இந்த பிரிவில், 618 பொறியிய; படிப்பு இடங்கள் காலியாக உள்ளன.

இன்று, பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உள்ள 8 ஆயிரத்து 948 இடங்களில், கலந்தாய்வில் பங்கேற்க 416 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்களுக்கு 2 ஆயிரத்து 113 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உள்ள 143 இடங்களுக்கு ஆயிரத்து 243 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவு மாணவர்கள், இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

வரும் 27-ந்தேதி, தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு ஆணையை, அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மாணவர்கள் இறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களில், தகுதியானவர்களுக்கு வருகிற 28-ந்தேதி காலை 7 மணிக்கு என்ஜினீயரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.