சென்னை

ன்று சென்னையில்  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி உருவம் பதித்த ரூ.100 நாணயத்தை வெளியிட உள்ளார்.

 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசியிடம் அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசும்  அதற்கு அனுமதி வழங்கியது.

இன்று மாலை 6.50 மணிக்கு கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.  இந்த விழா தமிழக அரசு சார்பில் நடைபெறகிறது.

விழாவுக்கு முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார்.

மேலும் விழாவில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.