டெல்லி

ன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு விலக்கு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிரது.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை நடப்பு 2024-25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.  தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளதால்ல், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

இதையொட்டி பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து  அதன்படி 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிஅடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி வரை நடக்க உள்ளது.

இன்று இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் நடக்கிறது.  இந்த பட்ஜெட்டை நிதி அமைச்ச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் மற்றும் பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

இந்த பட்ஜெட் மீது மக்களிடமும் பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் காணப்படுகிறது.  வருமான வரிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து இருக்கின்றன. மத்திய பட்ஜெட் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? என்பது இன்று தெரிந்து விடும்.