திருவனந்தபுரம்
இன்று கேரளா மாநிலத்தில் 7,722 மற்றும் மகாராஷ்டிராவில் 1,338 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 66,09,292 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,40,170 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,584 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 64,47,038 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,465 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 7,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 49,54,063 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 471 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,156 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 6,648 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 48,43,576 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 78,802 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
[youtube-feed feed=1]