சென்னை
தமிழகத்தில் இன்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,67,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,28,611 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 5,81,03,351 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து 23 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 21 பேர் வந்துள்ளனர். இதுவரை 27,60,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 36,825 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 721 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,07,779 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 22,828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 3,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,73,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 5 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,665 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 172 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,52,889 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 11,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 816 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 309 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இதுவரை கோவை மாவட்டத்தில் 2,54,330 பேர் பாதிக்கப்பட்டு 2,522 பேர் உயிர் இழந்து 2,50,503 பேர் குணம் அடைந்து தற்போது 1305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,77,689 பேர் பாதிக்கப்பட்டு 2,550 பேர் உயிர் இழந்து 1,72,702 பேர் குணம் அடைந்து தற்போது 2,437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]