சென்னை

மிழகத்தில் இன்று 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,60,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 1,17,611 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 5,79,74,615 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 9 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 29 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,60,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,814 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 688 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,07,058 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 16,577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 2481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,69,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,660 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 168 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,52,717 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 7,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 596 உடன் இரண்டாம் இடத்திலும் கோவை 259 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,54,018 பேர் பாதிக்கப்பட்டு 2,521 பேர் உயிர் இழந்து 2,50,408 பேர் குணம் அடைந்து தற்போது 850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,76,893 பேர் பாதிக்கப்பட்டு 2,549 பேர் உயிர் இழந்து 1,72,633 பேர் குணம் அடைந்து தற்போது 1,711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

[youtube-feed feed=1]