சென்னை

தமிழகத்தில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,42,730 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 51,010 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,61,78,130 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.   இதுவரை  8,42,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,391 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 491 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,26,011 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,328 பேர் சிகிச்சையில் உள்ளனர்.