சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்வுக்கான  ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு   ஜூலை 12, 2025 அன்று (காலை 09.30 முதல் மதியம் 12.30 வரை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில்  அட்மிட் கார்டு எனப்படும் ஹால்டிக்கெட்  வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக  குரூப்4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது.  காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் பங்குபெற விரும்பும்,  தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிசி தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியது. அதன்படி, ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.