சென்னை
ஐ பி எஸ் அதிகாரியான சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான சுதாகர் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். /ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுதாகரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அவர் 5 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ சுதாகர் அந்தப் பதவியில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel