சென்னை
தமிழக அரசின் பிணையப் பத்திரங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

தமிழக அரசு மொத்தம் ரூபாய் 7,000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகள் 6 மாத காலப் பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி, 4 ஆண்டுகள் 6 மாத காலப் பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி, 5 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி, 8 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2,000 கோடி, 20 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 30 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மார்ச் 18, 2025 அன்று இந்த ஏலம் நடத்தப்பட உள்ளன.
முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாக போட்டி ஏலக் கேட்புகள் மற்றும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) மார்ச் 18, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.