சென்னை
இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று வரை தமிழக பத்திரத்துறை வர்வய், ரூ. 20000 கோடியை தாண்டி உள்ளது.
அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை முக்கிய பங்காற்றுகிறது. அதாவது பொதுமக்களின் நிலம்-மனை உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் பதிவு மற்றும் நகல் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றின் கட்டணங்கள் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.
சென்ற 2023-24-ம் நிதியாண்டில் பத்திரப்பதிவுத்துறை ரூ.18 ஆயிரத்து 800 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்து இருந்தது. அந்த சாதனையை விட தற்போது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய சாதனையாக ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை நேற்று எட்டி பிடித்துள்ளது.
இது மாசி மாதம் என்பதால் பத்திரப்பதிவுகள் அதிகம் நடப்பதால் வருமானம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 33.3 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த 2024-25-ம் நிதியாண்டில் இதுவரை 32 லட்சம் பத்திரப்பதிவுகள் நடந்தாலும் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. மேலும் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.