சென்னை

மிழக அரசு தலைமை காஜி மிலாது நபி பண்டிகை வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்

இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் முகம்மது நபி அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர். முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

மெக்கா நகரில் முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் பிறந்தார். எனவே இந்த நாளையே மிலாது நபியாக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.  இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

காஜி அந்த அறிவிப்பில்.

”ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மிலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும்.”

என அறிவித்துள்ளார்.