சென்னை

மிழக அரசு கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு அரங்க கட்டுமான பணிகளுக்கூ டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை அருகிலுள்ள முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.487 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி தமிழக அரசு அழைப்பு வெளியிட்டுள்ளது.

இங்கு கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கத்தில் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம் ரூ.102 கோடியிலும், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகியவை ரூ.108 கோடியிலும் அமைய உள்ளன. மேலும் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிலான வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளபட உள்ளன.

வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் ஆகிய பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளப். வரும் 2025 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டு தொட்க்கத்தில் இந்த கட்டுமான பணிகளை நிறைவு செய்ய பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.