சென்னை

மிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார்.

இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.

இதில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்ைட, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.

இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை எடுத்துச் சென்றனர்.