சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுதந்திர இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை நேரு அமைத்ததாக புகழாரம் சூட்டி உள்ளார்.

இன்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் நினைவு நாளையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில்.

“இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற கனவுடன், நேரு தனது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மூலம் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிறுவுவதில் அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது.

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனையும், கொள்கைகளும் எப்போதும் நம்மை வழிநடத்தும்.

என்று பதிவிட்டுள்ளார்