டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் 5 நபர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

திருப்பதி லட்டில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து லட்டு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

முந்தைய விசாரணையின் போது, “திருப்பதி லட்டு சர்ச்சையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் ஏன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பத்திரிகையாளர் சந்திப்பில் அது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் ?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. “திருப்பதி லட்டு சர்ச்சையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் ஏன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பத்திரிகையாளர் சந்திப்பில் அது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் ?

இந்த விவகாரம் எனபது கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை சார்ந்தது. இதில் அரசியல் செய்ய கூடாது. கலப்பட நெய்தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதி படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஏன் பத்திரிகை சந்திப்பில் இந்த விவகாரத்தை தெரவிக்க வேண்டும் ? புகார் எழுந்தால் அனைத்து நிறுவன நெய்களும் சோதிக்கப்பட் டிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது ? திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வருகிறது ஆனால் செப்டம்பர் மாதம் அறிக்கையை வெளியிடுகிறீர்கள் அது ஏன் ?

நீங்கள் ஒரு அரசியல் சாசன அலுவலகத்தை கையில் வைத்திருக்கிறீர்கள். கடவுளை நீங்கள் அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும் இவை தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடிய ஒன்று” என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், லட்டு விவகாரத்தில் ஆந்திரா அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா? வேறு குழு அமைக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு எடுக்க வழக்கு 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து வழக்கு நேற்று (அக் 3ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,   லட்டு விவகாரத்தில் 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குநரின் மேற்பார்வையில் இயங்கவிருக்கும் இக்குழுவில் சிபிஐயை சேர்ந்த இருவரும் ஆந்திரா போலீஸை சேர்ந்த இருவரும் உணவு தர நிர்ணய வாரியம் சார்ந்த ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர். என கூறி லட்டு விவகாரத்தில்  மத்திய மாநில அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும், ”திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியல் போர்க்களமாக தொடர அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.