திருவள்ளூர்

து போதையில் திருவள்ளூர் மருத்துவமனையில் மருத்துவர் ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்யில் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். இவர்களுக்கு 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தினசரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிக்கு வந்த அந்த டாக்டர் அதிக மதுபோதையில் இருந்துள்ளார். அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

அவர் மதுபோதை மயக்கத்தில் ஆஸ்பத்திரி வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்   அவரை. உடனடியாக மருத்துவமனைக்கு உள்ளே செல்லுமாறு தெரிவித்தும் போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர் ஆஸ்பத்திரிக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

மருத்துவம்னை ஊழியர்கள், போதை டாக்டரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்து இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த டாக்டர் புறப்பட்டு சென்று உள்ளார். மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   இந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.