மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர் கே.ஜே பிரவீன் குமார் மற்றும் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐபிஎஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அப்படியெனில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கருதப்படும். அரசியல் சட்ட இயந்திரம் முடங்குவதற்கு (ஆட்சி முடக்கத்திற்கு) வழிவகுத்து விடும் என எச்சரித்தார்.

‘மதுரை ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜர் திருப்பரங்குன்றம் விவகாரம் – மதுரை ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜர் மலை மீது தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கின் விசாரணையின்போது, ”நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுரை கூறினார்.
மதுரை மாவட்டம் ஏழுமலை ராமரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘ திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர தீபத்தூணிலும், டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது போலீசாரின் கடமை என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் ஆணையர் நிறைவேற்றவில்லை. அமைதியாக இருந்த திருப்பரங்குன்றம் பகுதியில், தேவையின்றி போலீசாரை குவித்து பதற்றத்தை உருவாக்கினர். இது அந்த பகுதி மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய. ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் நோக்கில், அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதார் அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றவும், அதற்கு சிஐஎஸ்எப் வீரர்களை அனுப்பவும் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் செயல்படவும் அனுமதி மறக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால், அவர்கள் திமுக அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தனர். அதனால், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டது. இதனால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழல் உருவானது.
இதன்படி நேற்றைய விசாரணையின்போது, (டிச.,17) தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொலி காட்சியில் ஆஜரானார். மாவட்ட ஆட்சியர் கே.ஜே பிரவீன் குமார், மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
கலெக்டர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவிந்திரன், கூடுதல் அரசு பிளீடர் மாதவன் ஆகியோரும், போலீஸ் கமிஷனர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன், கூடுதல் அரசு பொது பிளீடர் ரவி ஆகியோரும், கோவில் செயல் அலுவலர் சார்பில் ஜோதியும் ஆஜராகினர்.
வழக்கின் விசாரணையின்போது, அப்போது நீதிபதி சுவாமிநாதன் கூறியதாவது, இந்த வழக்கு சம்பந்தமாக நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்து, நான் சோர்வடைந்து விட்டேன். நீதிமன்ற அவமதிப்புக்காக எத்தனை வழக்குகளில் அதிகாரிகளை கடிந்து கொள்வது?
இன்று கூட காணொளி காட்சி மூலம் ஆஜரான தமிழ்நாடு தலைமைச்செயலாளர் முருகானந்தம், தாங்கள் ‘நீதிமன்றம் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், அதன் உத்தரவை அமல் செய்யும்போது சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும்’ அறிக்கை வாசிக்கிறார்.
இது மன்னிக்க முடியாதது. ஒரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதைக்காட்டிலும் உயர்ந்த நீதி அமைப்பு தடை விதித்தாலோ அல்லது ரத்து செய்தாலோ தவிர, மற்ற அனைத்து சூழல்களிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.
சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த சூழலை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அப்படியெனில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கருதப்படும். அரசியல் சட்ட இயந்திரம் முடங்குவதற்கு வழிவகுத்து விடும்.
நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், தலைமை செயலாளர் பொறுப்பான நிலை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார். வழக்கு 2026 ஜன.9 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிபதிசுவாமிநாதன் கூறியது என்ன?