கோலாப்பூர்

நேற்று மகாராஷ்டிர மாநில திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கானக்கான ருபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி உள்ளன.

மகராஷ்டிர மாநிலம் கோலாபூர் மாவட்டத்தில் கேசவ்ராவ் போசாலே திரையரங்கம் உள்ளது.  இங்கு நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்து திரையரங்கம் முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. காவல்துறையினர் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.