லண்டன்:

லகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவில் தீவிரமாகி வரும் நிலையிலும், இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் தொடருக்காக மேற்கு இந்திய வீரர்கள் இன்று லண்டனம் வந்தடைந்தனர்.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் ஒத்தி வைக்கப்படும், ரத்து செய்யப்பட்டு இருந்தன.  தற்போது சில நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால், முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி  இன்று (ஜூன் 9ஆம் தேதி) இங்கிலாந்து வந்தடைந்தது.  அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், அவர்கள்  14 நாட்கள் தனிமைப்படுத்தப் பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று  இங்கிலாந்து வந்தடைந்த மேற்கு இந்திய தீவு அணி வீரர்கள் அனைவரும், இங்கிலாந்து ஓல்ட் டிராஃபோர்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்ட உள்ளது.
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி சவுதம்டன் மைதானத்தில் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் மான்செஸ்டரில் ஜூலை 16, 24ஆம் தேதிகளில் தொடங்கி நடைபெற உள்ளது.
கொரோனா காலத்தில் நடத்தப்படும் இந்த போட்டிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் கவுன்சில் புதிதாகப் பல விதிமுறைகளை விதித்துள்ளது.

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சமூக இடை வெளியை உறுதி செய்வது, சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதி செய்வது போன்றவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர் என இங்கிலாந்து கிரிக்கெட் கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

களத்தில் இருக்கும் வீரர்கள், நடுவர்கள், பணியாளர்கள், பாதுகாவலர்கள், நேரலை செய்யும் தொலைக்காட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் உரியப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்  இங்கிலாந்து நாடு  உறுதி அளித்துள்ளது.
[youtube-feed feed=1]