சென்னை: சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ள இயக்குனர் வெற்றி மாறனின் பேட் கேர்ள்  படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திராவிட பிரச்சார படமான ‘பேட் கேர்ள்’ டீசரை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு சமூகத்தி இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் வந்த நிலையில்,படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க்

இந்தப் படத்தின் முதல்  டீசர் குடியரசு நாளில்  (ஜனவரி 26) வெளியிடப்பட்டது. ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள பேட் கேர்ள் டீசர், யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது. இந்த படம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில், தற்போது பேட் கேர்ள் படம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த படத்தை தடை செய்யக்கோரி,  சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற பதிவேற்றங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.