வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நிலத்தை நோக்கி நகர்ந்ததால் மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் உள்பகுதியில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பாண்டி-கடலூர்-மயிலாடுதுறையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel