சென்னை

ளவாய் சுந்தரம் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கன்னியாகுமரியில் ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தது. இந்த பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததார்.  இது அதிமுக வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  இன்று, அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

”கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்.”

எனக் கூறப்பட்டுள்ளது.