சென்னை: பாரிமுனை அருகே பூக்கடை பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான பாத்திமா ஜுவல்லர்ஸ நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பூக்கடை அருகே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ளது பிரபல நகைக்கடை பாத்திமா ஜூவல்லர்ஸ். இந்த நகைக்கடை அமைந்துள்ள  அடுக்குமாடி கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.