ண்டிகர்

நேற்று நள்ளிரவு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் அரியானா – பஞ்சாப் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு பஞ்சாப் போலீசார் அந்த பகுதிக்கு சென்று போக்குவரத்துக்கு தடையாக இருந்த தடுப்பான்களை அகற்றினர். அவற்றை புல்டோசர்களை கொண்டும் இடித்து தள்ளி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை  அகற்றினர்.

இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி அகற்றவில்லை என பாட்டியாலா சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு நானக் சிங் கூறினார். தற்போது நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.  , காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள முக்கிய விவசாய தலைவர்களான ஜெகஜீத் சிங் தல்லேவால், சர்வன் சிங் பாந்தர் உள்ளிட்டோர் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி தலைமையிலான அரசின் இந்த முடிவுக்கு விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் கடும் கண்டனம் தெரிவித்து. அனைத்து அமைப்புகளும் போராட்டத்திற்கு தயாராக உள்ளன என கூறியுள்ளார்.எனவே, எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஷம்பு எல்லையில் இன்று காலை அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக, உள்ளூர் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், இளைஞர்களின் வேலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன என பஞ்சாப் அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறினார்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு எதிராக உள்ளதால் அவர்கள் டெல்லிக்கு சென்று போராட வேண்டும் எனவும் அதற்கு பதிலாக, பஞ்சாப் சாலைகளில் இருந்து கொண்டு மறியலில் ஈடுபட கூடாது எனவும் தெரிவித்துள்ளார்