சென்னை:  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு  இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர் உள்ளதாக கூறினார். முன்னதாக சென்னை மயிலாப்பூரில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர்  சத்திய பிரதா சாக, தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், மொத்த வாக்காளர்கள்  6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர்  என்றவர், இவர்களில் ஆண் வாக்காளர்கள் – 3,03,95,103, பெண் வாக்காளர்கள் – 3,14,23,321, மாற்றுப் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் என கூறினார்.

மேலம்,  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி 7-ந்தேதியுடன் முடிவடைந்தது.

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

 பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்  என்றும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் இந்த முகாமில்,   வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.