சென்னை: தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்  அக்டோபர் 14ல் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த  சபாநாயகர் அப்பாவு,  அக்டோபர் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்றார்.  . அன்றைய தினம் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.  அதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் சட்டமன்றம் என்பது அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

இது தொடர்பாக தலைமை செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 2025-ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 14-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.