சென்னை: அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் மோடி அரசை எதிர்க்​கும் வழியை இந்தியாவுக்கு தமிழகம் எடுத்​துக்​காட்​டி​யிருக்​கிறது என்று சென்னையில் நடைபெற்ற  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்   பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை  தலைமையில் அரசியலமைப்பை காப்பாற்றுவோம் – அரசியல் மாநாடு  தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில்,  கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் விஜய் இந்தர் சிங்கலா,  இணை செய​லா​ளர் நிதின் கும்​பல்​கர், எம்​பி.க்​கள் சுதா ராமகிருஷ்ணன், சசி​காந்த் செந்​தில், விஜய்​ வசந்த்​, முன்​னாள்​ எம்​பி. ஏ.செல்​லக்​கு​மா கட்சி மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், அழகிரி, எம்.கிருஷ்ணசாமி கே.வி.தங்கபாலு, உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டின் தொடக்கத்தில் மாநில தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, ‘இந்​திய அரசி​யலமைப்​பு’ புத்​தகத்தை காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு வழங்கினார். ‘ஒரு​மித்த குரலோடு, ஒற்​றுமை​யான கைகளோடு இந்​திய தேசத்தை பாது​காப்​போம்’ என்று உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய   தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்​வப்​பெருந்​தகை பேசும்போது,   காங்​கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்​டங்​கள் மக்​களுக்​கானது. ஆனால் பாஜக கொண்டு வந்த திட்​டங்​கள் அம்​பானிக்​கும், அதானிக்​கு​மானது. பாஜக ஆட்​சி​யில் 50 சதவீதத்​துக்கு மேல் தேசத்​தில் ஒவ்​வொரு குடிமகன் மீதும் கடன் சுமத்​தப்​பட்​டிருக்​கிறது.

அரசி​யலமைப்பு சட்​டத்தை மாற்றி எழுத வேண்​டும் என்​பது தான் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் திட்​ட​மாகும். ஆனால் யார் ஆட்​சிக்கு வந்​தா​லும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் அடிப்​படையை மாற்ற முடி​யாது. அங்கே தான் அம்​பேத்​கர் மக்​களோடு வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதைத்தொடர்ந்தது,   மாநாட்​டில் கலந்து கொண்ட அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர்  பேசினார். அப்போது,   ‘‘நாட்​டில் ஜனநாயக படு​கொலை நடந்து கொண்​டிருக்​கிறது. அம்​பேத்​கர் உரு​வாக்​கிய அரசி​யலமைப்பு சட்​டத்தை பாது​காக்க வேண்​டியது நமது கடமை. அமலாக்​கத்​துறை​யும், சிபிஐ​யும் பாஜக அரசின் கைப்​பாவை​யாக செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது.

புதுச்​சேரி​யில் பெரியள​வில் ஊழல் நடை​பெற்று கொண்​டிருக்​கும் நிலை​யில் அங்​கெல்​லாம் அமலாக்​கத்​துறை செல்​லாமல், தமிழகத்​துக்கு வரு​கிறது. இதையெல்​லாம் நாட்டு மக்​கள் நன்கு அறி​வார்​கள். இந்த ஆட்​சி​யாளர்​கள் விரை​வில் மாற்​றப்​படு​வார்​கள்.

ஆளுநருக்கு எதி​ராக பெற்ற உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்​பின் மூலம் பல்​வேறு வழிகளில் அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் மோடி அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் எடுத்​துக்​காட்​டி​யிருக்​கிறது.” என்று குறிப்​பிட்​டார்.