தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வரும் மழை அடுத்த இரண்டு நாட்களில் அதி கனமழையாக கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்றும் அது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை – தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 26 மற்றும் 27ம் தேதிகளில் அதி கனமழைக்கும் 28ம் தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]