பாரிஸ்

பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மாண்வர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்ப்பட்டுள்ளது.

செல்போன் என்பது இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உலக நாடுகள் பலவும் இதனை தவிர்க்க முயன்று வருகின்றன. சமீபத்தில் சுவீடன் அரசாங்கம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியது.

இதைப் போல் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி 11 முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது.

இதை  மீறினால் மாணவர்களின் செல்போன்களை ஆசிரியர்கள் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். விரைவில் உயர்நிலை வகுப்புகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.