டெல்லி: வாக்கு எண்ணிக்கை அன்று வரலாறு காணாத அளவில் பங்கு சந்தையில் சரிவு காணப்பட்டது. இதனால் பல நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதை  விசாரிக்க கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

பங்குச் சந்தை சரிவு என்பது பங்கு விலைகளில் திடீர் மற்றும் எதிர்பாராத சரிவு ஆகும். ஒரு பெரிய பேரழிவு நிகழ்வு, பொருளாதார நெருக்கடி அல்லது நீண்ட கால ஊகக் குமிழியின் வெடிப்பு ஆகியவற்றின் விளைவாக பங்குச் சந்தை வீழ்ச்சி ஏற்படலாம். பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு விடையிறுக்கும் பிற்போக்குத்தனமான பொது அச்சமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம், இது விலையை மேலும் குறைக்கும் பீதி விற்பனையைத் தூண்டுகிறது.

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை என்றாலும், அவை பொதுவாக ஒரு சில நாட்களில் பங்குக் குறியீட்டில் திடீரென இரட்டை இலக்க சதவீதம் சரிவு என வரையறுக்கப்படுகிறது. பங்குச் சந்தை சரிவு பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். பல சந்தை சரிவுகளுக்கு அதிகப்படியான ஊகங்கள் காரணமாக இருக்கலாம்.

அதிகப்படியான அந்நியச் செலாவணி விஷயங்கள் நன்றாக நடக்கும்போது, ​​அந்நியச் செலாவணி (சில நேரங்களில் “கடன் வாங்கிய பணம்” என்று அழைக்கப்படுகிறது) ஒரு மதிப்புமிக்க கருவியாகத் தோன்றலாம்.  அந்நியச் செலாவணி, மறுபுறம், அதற்கு எதிராக விஷயங்கள் நடக்கும்போது மிகவும் அபாயகரமானதாக இருக்கலாம். சில  விஷயங்கள் தவறாக நடக்கும்போது, ​​அதிகப்படியான அந்நியச் செலாவணி கீழ்நோக்கிய சுழல் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். விலைகள் வீழ்ச்சியடையும் போது, ​​வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிக கடன்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது விலைகளை மேலும் குறைக்கிறது.

அதுபோல அரசியல் ஸ்திரத்தன்மை  மற்றும் அரசியல் ஆபத்து  போன்றவற்றால், நாட்டில்  நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது முதலீட்டாளர்களின் அடுத்த நகர்வுகள் பயமுறுத்துகின்றன. இது பங்கு சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதுபோன்ற சம்பவம் கடந்த 4ந்தேதி (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நாளன்று நடைபெற்றது. அன்றைய தினம் அதானி நிறுவனம் உள்பட பிரபல தொழில் நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன.

முன்னதாக, ஜூன் 1ந்தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து வெளியான தேர்வுக்கு பிறகான கருத்துக்கணிப்புகளில், (எக்சிட் போல்) பெரும்பானலா ஊடகங்களின் கணிப்புகள், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தனர். இதனால், பங்கு வணிகம் கடுமையாக உயர்ந்தது. பல நிறுவனங்கள்  கோடிக்கணக்கில் லாபத்தை சந்தித்தன.

ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை உயர்வான நிலையில் இருந்த பங்கு சந்தை, என்டிஏ மற்றும் பாஜகவின் வெற்றிகள் குறையத்தொடங்கிய நிலையில், அதிரடியாக சரிவை கண்டன.  பின்னர் சற்று ஏறத்தொடங்கியது.

இநத் நிலையில்,  வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து,  மத்திய  அரசு மற்றும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் பாஜக பின்னடைவு எதிரொலி: சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் 6000+ புள்ளிகள் வீழ்ச்சி