சென்னை: துணை வேந்தர்கள் நியமனத்துக்கு தடை  விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின்  சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

தமிழக அரசின் மனு கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் துணைவேந்தர் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, அந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைதொடர்ந்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற  தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனு குறித்து  கோடை கால விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

முன்னதாக,  தமிழ்நாட்டில் உள்ள  பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

துணைவேந்தர் நியமன அதிகாரம் விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன்,  சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு போதிய அவகாசம் தராமல் இடைக்கால தடை விதித்துள்ளது. இது முறையற்றது. சென்னை உயர்நிதி மன்றத்தின் நகல் கிடைக்கப்பெற்ற பெற்று மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறியதுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தஉத்தரவு உச்சநீதி மன்றத்தை அதிருப்திக்கு ஆளாக்கும் வயில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.