வேலூர்:
தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்காத அதிமுக அரசு, தேர்தல் தோல்வியை தவிர்க்கவே ஜெயலலிதா நினைவிடத்தை இந்த நேரத்தில் திறந்துள்ளது என்றும், அதிமுகவின் நாடகம் நடத்துகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
Patrikai.com official YouTube Channel