நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள்மீது இலங்கை கடற்படையனிர் அரிவாள் மற்றும் ஆதயுங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியதில், 11  மீனவர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகபட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நம்பியார்நகர் கிராமத்தை சேர்ந்த சசி குமார், உதயகுமார், சிவ சங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 11 மீனவர்கள்,   . சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான படகிலும் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான படகிலும்   மீன்பிடிக்க சென்றனர்.  இவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே இந்திய எல்லைக்குள் நடுக்கடலில் மீன்  கொண்டிருந்த போது   அங்கு வந்த  இலங்கை கடற்கொள்ளையர்கள்  தமிழக மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

நாகை மீனவர்கள்மீது,   வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தினர். இதில், மீனவர் சசிகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். அதே போல் சிவசங்கர் என்ற மீனவருக்கு இடதுகையில் மணிக்கட்டில் அறிவால் வெட்டு ஏற்பட்டு நரம்பு துண்டிக்கப்பட்டு ருது. இதையடுத்து, மீனவர்களிடம் இருந்த வலைகள், மீன்பிடி தளவாடப்பொருட்கள் , ஐஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பிடுங்கி சென்றனர். மேலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலைகள், சுசுகி எஞ்சின்களை பறித்து சென்றனர்.

இதையடுத்து, மீனவர்கள், உயிர்பிழைத்தபடி கரைக்கு வந்துரு சேர்ந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்த மற்ற மீனவர்கள், அவர்களை நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இவர்களில் சிலருக்கு அதிக காயம் இருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக  தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சக மீனவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. நடுக்கடலில் சுதந்தரமாக மீன்பிடிப்பதற்கு கூட தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியதுடன், மத்திய மாநில அரசுகள், இந்த விஷயத்தில் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடரக்கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.