சென்னை
கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் = திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

வரும் ஏப்ரல் – மே மாதங்களில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. மக்கள் கோடை விடுமுறைக்கு அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம் என்பதால் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே.
”தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ந் தேதி முதல் இருந்து 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி , சனி , ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும். இந்த ரயில் அதிவேக ரயிலாக இயக்கப்படும்”
என அறிவித்துள்ளது,
வழக்கமாக கோடை விடுமுறையின் போது பேருந்துகள், மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆகவே, கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.